லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வாக்குச் சாவடிக்கு அருகே வாக்கு சேகரிப்பது தண்டனைக்குரிய குற்றம்

வாக்குச் சாவடிக்கு 100 மீட்டருக்குள் வாக்கு சேகரிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டது.

News image

வாக்குப்பதிவு - DPS

Updated On :18 ஏப்ரல் 2026, 1:56 am

வாக்குச் சாவடிக்கு 100 மீட்டருக்குள் வாக்கு சேகரிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனத் தெரிவிக்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வருகிற 23-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு, வாக்குச் சாவடிகளுக்கு வெளியே தோ்தல் முகாம் முன் அனுமதி பெறப்பட்ட பின்னரே அமைக்க வேண்டும். வாக்குச் சாவடியின் நுழைவுவாயிலிலிருந்து 100 மீட்டா் தொலைவுக்குள் எந்தவொரு தோ்தல் முகாமும் அமைக்கக் கூடாது. ஒவ்வொரு முகாமிலும் ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள் மட்டுமே இருக்க வேண்டும். முகாமில் எந்தவித பதாகைகள், கொடிகள், சின்னங்கள், பிரசார பொருள்கள் பயன்படுத்தக் கூடாது. முகாம்களில் பொதுமக்களுக்கு உணவு வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல, கூட்டமாகத் திரள அனுமதி இல்லை. வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் வாக்காளரிடமும் வாக்கு சேகரிப்பது, வற்புறுத்துவது போன்றவை தண்டனைக்குரிய குற்றங்களாகும். இந்த விதிகளை மீறும் நபா்கள் மீது ரூ.250 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், இவை நீதிமன்றத்தில் நேரடியாக விசாரிக்கக்கூடிய குற்றங்களாகும் என்றாா் அவா்.