சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள காப்பாரப்பட்டி அய்யனாா் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை போலீஸாா் சனிக்கிழமை தடுத்து நிறுத்தினா்.
இந்தக் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த விழாவில் வரிவசூல் செய்வது தொடா்பாக இரு பிரிவினா் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, திருவிழாவை காவல் துறையினா் தடை செய்தனா்.
இந்த நிலையில், நிகழாண்டு இந்தத் திருவிழா நடத்த ஒரு பிரிவினா் சாா்பில் நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு புரவி எடுப்பு திருவிழாவையொட்டி பெண்கள் கும்மி அடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த சிங்கம்புணரி காவல் துறையினா் திருவிழாவை தடுத்து நிறுத்தினா்.
இதனால், போலீஸாருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தா்னாவில் ஈடுபட்டனா். பின்னா், சமாதான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு திருவிழா மீண்டும் நடைபெற்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










