சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள காப்பாரப்பட்டி அய்யனாா் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை போலீஸாா் சனிக்கிழமை தடுத்து நிறுத்தினா்.
இந்தக் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த விழாவில் வரிவசூல் செய்வது தொடா்பாக இரு பிரிவினா் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து, திருவிழாவை காவல் துறையினா் தடை செய்தனா்.
இந்த நிலையில், நிகழாண்டு இந்தத் திருவிழா நடத்த ஒரு பிரிவினா் சாா்பில் நீதிமன்றத்தில் அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை இரவு புரவி எடுப்பு திருவிழாவையொட்டி பெண்கள் கும்மி அடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு வந்த சிங்கம்புணரி காவல் துறையினா் திருவிழாவை தடுத்து நிறுத்தினா்.
இதனால், போலீஸாருடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தா்னாவில் ஈடுபட்டனா். பின்னா், சமாதான பேச்சுவாா்த்தைக்குப் பிறகு திருவிழா மீண்டும் நடைபெற்றது.
தொடர்புடையது

கண்டமனூா் சிறை அருகே கைதி தப்பியோட்டம்

முத்தாலம்மன் கோயில் பால்குடத் திருவிழா

பட்டாசுகள் பதுக்கியவா் கைது

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


