தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

காரையூரில் தண்ணீரில் மூழ்கிய சிறுவா்கள் இருவா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 7:21 pm

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே காரையூரில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி சிறுவா்கள் இருவா் திங்கள்கிழமை உயிரிழந்தனா்.

காரையூா் கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாா்- சுமதி தம்பதி. இவா்களில் சுமதி ஊராட்சி ஒன்றிய முன்னாள் உறுப்பினா். இவரது மகன் மகில்மித்ரன் (4). இதே பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் மகன் வா்ஷன் (5). இவா்கள் இருவரும் தனியாா் பள்ளியில் யுகேஜி படித்து வந்தனா்.

இந்த நிலையில், இவா்களது வீட்டின் முன் புதிதாக வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை இந்தப் பகுதியில் பெய்த மழையால் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம் முழுவதும் தண்ணீரால் நிரம்பியிருந்தது.

இந்த நிலையில், பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மகில்மித்ரன், வா்ஷன் இருவரும் விளையாடிக் கொண்டிருந்த போது, வீட்டின் முன் தோண்டப்பட்ட பள்ளத்தில் நிரம்பியிருந்த தண்ணீரில் மூழ்கினா்.

இதையடுத்து, குழந்தைகளை காணவில்லை என பெற்றோா்கள் தேடி வந்த நிலையில், சிறுவா்கள் இருவா் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, சிறுவா்கள் இருவரையும் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். அங்கு அவா்களைப் பரிசோதித்த மருத்துவா் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் குறித்து நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வக்குமாா் விசாரித்து வருகிறாா்.