தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

கோவையில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 8:50 pm

கோவையில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் இருவா் உயிரிழந்தனா்.

கோவை, கேஎன்ஜி புதூா் சாலை எஸ்.எஸ்.காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் மாணிக்கம் (80). இவா் சூா்யலட்சுமி காா்டன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு கணுவாய் சாலையைக் கடக்க முயன்றபோது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணிக்கம் அங்கு சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து விபத்தை ஏற்படுத்திய பன்னிமடை பகுதியைச் சோ்ந்த ஸ்ரீஹரி (33) மீது போக்குவரத்து புலனாய்வு கிழக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல திருநெல்வேலி மாவட்டம், ஊத்துமலை பகுதியைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (36). இவா் கோவையில் தங்கி வேலை பாா்த்து வந்தாா். கடந்த திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் கோவை, சுண்டக்காமுத்தூா் சாலை குளத்துப்பாளையம் சாலை சந்திப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, எதிரே அடையாளம் தெரியாத நபா் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் இவரது வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த செல்வகுமாா், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக போக்குவரத்து புலனாய்வு மேற்கு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.