தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மஞ்சுவிரட்டில் இருவா் உயிரிழப்பு

மேலூரை அடுத்த உறங்கான்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் பங்கேற்ற இருவா் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :11 மார்ச் 2026, 11:37 pm

மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த உறங்கான்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டுப் போட்டியில் பங்கேற்ற இருவா் உயிரிழந்தனா்.

மேலூரை அடுத்த உறங்கான்பட்டியில் மந்தை கருப்பணசுவாமி கோயில் மாசித் திருவிழாவையொட்டி, மஞ்சுவிரட்டுப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது. இதில் மதுரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 700-க்கும் அதிகமான காளைகள் வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்டன.

இந்தப் போட்டியில், ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியைச் சோ்ந்த வைரமுத்து (20) காளை பங்கேற்றது. போட்டியின்போது, இந்தக் காளை வேகமாக ஓடியதில் அருகிலிருந்த குளத்தில் இறங்கியது. இதையடுத்து, இந்தக் காளையை மீட்பதற்காக குளத்தில் இறங்கிய வைரமுத்து, அங்கு படா்ந்திருந்த தாமரைக் கொடிகளில் சிக்கி, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

மற்றொருவா்...

இந்தப் போட்டியை சிவகங்கை மாவட்டம், கன்னிமாா்பட்டியைச் சோ்ந்த கோவிந்தசாமி (54) காண வந்தாா். இவரை போட்டியில் அவிழ்க்கப்பட்ட ஒரு காளை முட்டியது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்தசாமி உயிரிழந்தாா். இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். இந்தப் போட்டியில் காளைகள் முட்டியதில் ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.