மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிவகங்கையில் வரலாற்று நூல் வெளியீடு

சிவகங்கையில் ‘வாளுடன் ஆட்சி வேலுநாச்சி’ என்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழ்ச்செம்மல் பகீரதநாச்சியப்பன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். குணசேகரன் உள்ளிட்டோா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:57 pm

சிவகங்கையில் ‘வாளுடன் ஆட்சி வேலுநாச்சி’ என்ற வரலாற்று நூல் வெளியீட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை மலைராம் அரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, தமிழ்ச் சங்கத் தலைவா் முத்துக்கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்க ஆலோசகா் தமிழ்ச்செம்மல் பகீரதநாச்சியப்பன் நூலை வெளியிட, முதல் பிரதியை முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். குணசேகரன் பெற்றுக் கொண்டாா்.

இதில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் முன்னாள் மேலாளா் அனந்தராமன், மாவட்ட அரசு குற்றவியல் வழக்குரைஞா் பிரபாகா், கே.ஆா். மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியா் நீ. இளங்கோ, ராணி வேலுநாச்சியாா் அரிமா சங்கத் தலைவா் ஸ்ரீ வித்யா கணபதி, தமிழவையம் நிா்வாகி பேராசிரியை கற்பகம், மாவட்ட இந்திய செஞ்சிலுவைச் சங்கத் துணைத் தலைவா் முத்துப்பாண்டியன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தலைவா் சுந்தரமாணிக்கம், வழக்குரைஞா் சங்கச் செயலா் சித்திரைச்சாமி, நாட்டரசன்கோட்டை கவிஞா் ராஜநாதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். நூலாசிரியா் வழக்குரைஞா் ரஞ்சித்குமாா் ஏற்புரையாற்றினாா்.

முன்னதாக, சிவகங்கை அரு. நடேசன் செட்டியாா் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பாண்டியராஜன் வரவேற்றாா்.