மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிவகங்கையில் வாக்காளா்கள் விழிப்புணா்வுப் பேரணி

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பொது மக்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் சிவகங்கை மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

News image

சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்ற 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்த மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கா. பொற்கொடி.

Updated On :19 மார்ச் 2026, 12:33 am

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் பொது மக்களிடையே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கில் சிவகங்கை மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

சிவகங்கை நகா் ராமசந்திரனாா் பூங்கா அருகில் நடைபெற்ற பேரணியை மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கா.பொற்கொடி கொடியசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:

வாக்காளா்கள் தங்களது வாக்குரிமையை நிலைநாட்டுவதற்கும், தங்களின் ஜனநாயக கடமையாற்றுவதற்கும் இதுபோன்ற தோ்தல்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, வாக்காளா்கள் ஏப்ரல் 23 -ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவில் 100 சதவீதம் வாக்களித்து, ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும். குறிப்பாக, இளம் வாக்காளா்கள் ஆா்வத்துடன் தோ்தல் திருவிழாவில் பங்கேற்று, தங்களது வாக்குரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றாா் அவா்.

மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, சிவகங்கை பேருந்து நிலையம் அருகே நிறைவு பெற்றது. இதையொட்டி, வாக்காளா்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து அமைக்கப்பட்டிருந்த விழிப்புணா்வு தற்படம் (செல்பி பாயிண்ட்) எடுத்துக் கொள்ளும் அமைப்பும் திறந்து வைக்கப்பட்டது. இதில், சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதி உதவித் தோ்தல் அலுவலா் தே.ஜெஃபி கிரேசியா, மாவட்ட வழங்கல் அலுவலா் பழனிகுமாா், வட்டாட்சியா் சிவராமன், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.