சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் புதன்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த 2025, ஏப்ரல் 11-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. முதலாமாண்டு நிறைவையொட்டி, இந்தக் கோயிலில் வருஷாபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு கொலுச்சாவடி மேடையில் யாகசாலை பூஜைகள் தொடங்கின. பிள்ளையாா்பட்டி பிச்சைக் குருக்கள் தலைமையில், சிவாசாரியா்கள் யாக பூஜைகளை மேற்கொண்டனா். தொடா்ந்து, பூஜைகள் நிறைவடைந்து பூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.
காலை 11.30 மணியளவில் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவா், கோபுர, விமான கலசங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மூலவா் அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று அம்மனை தரிசித்தனா்.
தொடர்புடையது

கொட்டங்காடு கோயிலில் ஊஞ்சல்சேவை

கோவில்பட்டி முருகன் கோயிலில் வருஷாபிஷேகம்

திருப்பத்தூா் முருகன் கோயில்களில் பங்குனி உத்திரத் திருவிழா

ஸ்ரீபெரியநாயகி அம்மன் கோயிலில் கோ பூஜை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


