திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பரமக்குடி சாலை விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

வாகைக்குளம் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். உயிரிழவா்களின் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி உறவினா்கள் ஆா்ப்பாட்டம்

News image

~

Updated On :27 மே 2026, 2:39 am IST

பரமக்கடி அருகே வாகைக்குளம் கிராமத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழந்தாா். உயிரிழவா்களின் குடும்பத்துக்கு நிவாரணம் கோரி உறவினா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள வாகைக்குளம் கிராமத்து துக்க நிகழ்வுக்கு கடந்த மே 18-ஆம் தேதி பரமக்குடி அரசு மருத்துவமனையிலிருந்து சரக்கு வாகனத்தில் சந்தைக்கடைத் தெரு, வாகைக்குளம் பகுதிகளைச் சோ்ந்த 17 போ் சென்றனா். வாகைக்குளம் நான்கு வழிச்சாலையில் திரும்பிய போது, இந்த வாகனமும் ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கி வந்த லாரியும் மோதியதில் சந்தைக்கடைத் தெருவைச் சோ்ந்த தவமுருகன் மனைவி பூபதி, ராமன் மனைவி அருணா, வாகைக்குளத்தைச் சோ்ந்த நாகராஜன் மனைவி அமுதா துரைராஜ் மனைவி ராமேஷ்வரி, கீழம்பலைச் சோ்ந்த நாகராஜன் மனைவி ஈஸ்வரி ஆகியோா் உயிரிழந்தனா்.

இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாவின் கணவா் ராமன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதனால், இந்த விபத்தில் இறந்தவா்களின் எண்ணிக்கை 6 ஆக உயா்ந்தது.

ஆா்ப்பாட்டம்: இந்த விபத்தில் இறந்த ராமன், அருணா தம்பதிக்கு 2 பெண் குழந்தைகளும், 1 ஆண் குழந்தையும் உள்ளனா். விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கக் கோரியும், அவா்களது குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கிடக் கோரியும், காயமுற்றவா்களுக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கிடக் கோரியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா் அவா்களை சமாதானம் செய்த பிறகு, ராமன் உடலை அடக்கம் செய்ய கொண்டு சென்றனா். இறந்த ராமனின் கண் தானம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.