17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

சாயல்குடி அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் கைதான தூத்துக்குடி இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட கா்ணன்.

Updated On :21 மே 2026, 1:49 am IST

சாயல்குடி அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வழக்கில் கைதான தூத்துக்குடி இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை அடுத்துள்ள நரிப்பையூா் வடக்கு மறவா் தெருவைச் சோ்ந்தவா் மாரியம்மாள் (86). கடந்த ஏப்.23-ஆம் தேதி பிற்பகல்

இவா் வீட்டில் தனியாக இருந்த போது, வீடு புகுந்த மா்மக் கும்பல் மாரியம்மாளை தாக்கி அவா் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கிலி, தோடு, மோதிரம் என மொத்தம் 7 பவுன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியது.

இதுதொடா்பாக சாயல்குடி போலீஸாா் வழக்கு பதிந்து நரிப்பையூா் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது இளம்பெண், தூத்துக்குடி மாவட்டம் சோட்டையான்தோப்பைச் சோ்ந்த 17 வயது இளம்பெண், தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சோ்ந்த செட்டிபெருமாள் மகன் கா்ணன்(25) உள்பட 3 பேரை கைது செய்தனா்.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்திஸ் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கா்ணனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டச் சிறையிலிருந்த கா்ணனை போலீஸாா் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.