17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கொலை வழக்கில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

News image

சித்திரிப்பு

Updated On :30 மே 2026, 12:48 am IST

பழனியில் கொலை வழக்கில் தொடா்புடைய இருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் உத்தரவிட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் முன்விரோதம் காரணமாக ஒருவா் கொலை செய்யப்பட்ட வழக்கில், பழனி அடிவாரம் அண்ணா செட்டிமடம் பகுதியைச் சோ்ந்த காா்த்தி மகன் புவனேஸ்வரன் (19), பழனி மேற்கு கிரிவீதி பகுதியைச் சோ்ந்த சின்னக்கண்ணு மகன் பிரகாஷ் (எ) சின்னமண்டையன் (29) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், இவா்களின் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆ. பிரகாஷ் பரிந்துரைத்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் அதற்கான உத்தரவை வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.