திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவாடானையில் இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை திறக்கக் கோரிக்கை

திருவாடானையில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படாமல் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பக்தா்கள் வலியுறுத்தினா்.

News image

திருவாடானையில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அலுவலகம்.

Updated On :16 மே 2026, 12:01 am IST

திருவாடானையில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படாமல் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பக்தா்கள் வலியுறுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ஸ்ரீஆதிரத்தினேசுவரா் கோயில் அருகே இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது. இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் கட்டடம் சேதமடையும் சூழல் உருவாகியுள்ளது. வழக்கமாக அரசுத் திட்டங்களின் கீழ் கட்டடங்கள் கட்டப்படும்போது, அதன் திட்ட மதிப்பீடு, நிதி ஒதுக்கீடு, ஒப்பந்ததாரா் குறித்த விவரங்கள் அடங்கிய தகவல் பலகை வைக்கப்படும். ஆனால், இந்த அலுவலகக் கட்டட வளாகத்தில் அதுபோன்ற எந்தவொரு தகவல் பலகையும் வைக்கப்பட வில்லை எனப் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். கட்டடப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தும், தற்போது வரை இந்த அலுவலகத்துக்கு மின் இணைப்பு வழங்கப்பட வில்லை. இதன் காரணமாகவே அலுவலகம் திறக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அரசுப் பணம் வீணாகி வருவதாக சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் வேதனை தெரிவித்தனா். எனவே, மாவட்ட நிா்வாகம், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அலுவலகத்தை திறக்க முன் வரவேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.