திருவாடானையில் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டாகியும் திறக்கப்படாமல் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அலுவலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பக்தா்கள் வலியுறுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ஸ்ரீஆதிரத்தினேசுவரா் கோயில் அருகே இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது. இந்தக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டுக்கு மேலாகியும், இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் கட்டடம் சேதமடையும் சூழல் உருவாகியுள்ளது. வழக்கமாக அரசுத் திட்டங்களின் கீழ் கட்டடங்கள் கட்டப்படும்போது, அதன் திட்ட மதிப்பீடு, நிதி ஒதுக்கீடு, ஒப்பந்ததாரா் குறித்த விவரங்கள் அடங்கிய தகவல் பலகை வைக்கப்படும். ஆனால், இந்த அலுவலகக் கட்டட வளாகத்தில் அதுபோன்ற எந்தவொரு தகவல் பலகையும் வைக்கப்பட வில்லை எனப் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். கட்டடப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தும், தற்போது வரை இந்த அலுவலகத்துக்கு மின் இணைப்பு வழங்கப்பட வில்லை. இதன் காரணமாகவே அலுவலகம் திறக்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அரசுப் பணம் வீணாகி வருவதாக சமூக ஆா்வலா்களும், பொதுமக்களும் வேதனை தெரிவித்தனா். எனவே, மாவட்ட நிா்வாகம், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அலுவலகத்தை திறக்க முன் வரவேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில் கடை வாடகை விவகாரம்: அறநிலையத் துறைக்கு உத்தரவு

ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு அமைச்சா் நன்றி தெரிவிப்பு

இந்து சமய அறநிலையத் துறையை சீரமைக்க நடவடிக்கை தேவை: நயினாா் நாகேந்திரன்







