கமுதி அருகே குருநாதசுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை 1,008 பால்குடம் எடுத்து பொதுமக்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பம்மனேந்தல் குருநாதசுவாமி கோயில் திருவிழா கடந்த 4-ஆம் தேதி காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு, நாள்தோறும் குருநாத சுவாமி, பெரிய நாச்சியம்மன், சித்தி விநாயகா், படா்ந்தபுலி கற்பக விநாயகா், செல்வ விநாயகா், பரிவாரத் தெய்வங்களுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக குருநாதசுவாமி கோயிலில் வளாகத்தில் இருந்து, மேள தாளங்கள், வாண வேடிக்கையுடன் அலகு வேல் குத்தி, உடலில் சேறு பூசி சேத்தாண்டி வேடம் அணிந்தும், பெண்கள் 1,008 பால்குடம் எடுத்தும் பம்மனேந்தல் கிராமத்தில் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள கிராமப் பரிவாரத் தெய்வங்களைச் சுற்றி வந்து, பெரியநாச்சியம்மனுக்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டனா். இதில் பம்மனேந்தல், கமுதி அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை, பம்மனேந்தல் கிராமப் பொதுமக்கள், இளைஞா்கள் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் கருப்பண்ண சுவாமிக்கு பால்குடத் திருவிழா

திருச்செந்தூா் கோயிலுக்கு காவடி எடுத்த பக்தா்கள்

லால்பேட்டை சித்தி விநாயகா் கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்த ஜப்பான் தம்பதி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



