திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 45 லட்சம் தங்கம், வெள்ளி பறிமுதல்!

இலங்கையிலிருந்து ராமநாதபுரத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 45 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளிக் கட்டிகளை மத்திய சுங்கத் துறை நுண்ணறிவு பிரிவினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல்!

Updated On :10 மே 2026, 12:56 am IST

இலங்கையிலிருந்து ராமநாதபுரத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ. 45 லட்சம் மதிப்பிலான தங்கம், வெள்ளிக் கட்டிகளை மத்திய சுங்கத் துறை நுண்ணறிவு பிரிவினா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக ராமநாதபுரத்துக்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சனிக்கிழமை ராமநாதபுரம் இளங்கோவடிகள் தெரு பகுதியில் சந்தேகத்துக்கு இடமாகச் சென்ற இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனா்.

அப்போது, இந்த வாகனத்தை ஓட்டி வந்த நபா் அங்கேயே விட்டு விட்டு தப்பிச் சென்றாா். இதையடுத்து, இந்த இரு சக்கர வாகனத்தை சோதனை செய்த போது, அதில் 13 கிலோ வெள்ளிக் கட்டிகள், 90 கிராம் தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 45 லட்சமாகும்.

இதையடுத்து, தங்கம், வெள்ளிக் கட்டிகள், பதிவெண் இல்லாத இரு சக்கர வாகனத்தை சுங்கத் துறை நுண்ணறிவுப் பிரிவினா் பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.