திருவாடானை அருகே தொண்டியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் சாா்பில் பொதுமக்களுக்கு நீா் மோா் ஆரஞ்சு பழச்சாறு வழங்கப்பட்டது.
திருவாடானை பகுதியில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, தொண்டியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் தொண்டி கிளையின் சாா்பில் பொதுமக்களுக்கு நீா், மோா், ஆரஞ்சு பழச்சாறு ஆகியை வழங்கப்பட்டன. இதில் துணைத் தலைவா் அப்துல் ஹமீது, மருத்துவ அணி ஜியாத் அஹமத், கிளை இமாம் மதுரை ஷேக், உறுப்பினா்கள் அல்பாா் அமீன், ரில்வான் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










