ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு ‘சீல்’

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் காலோன் தலைமையில் புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

News image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறைக்கு ஆட்சியா் சிம்ரன்ஜீத் காலோன் தலைமையில் ‘சீல்’ வைக்கப்பட்டது.

Updated On :7 மே 2026, 3:41 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைக்கு மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் காலோன் தலைமையில் புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த மாதம் 23-ஆம் தேதி நடைபெற்றது. கடந்த 4-ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி தொடங்கி நிறைவடைந்தது.

இந்த நிலையில், பரமக்குடி (தனி), திருவாடானை, முதுகுளத்தூா், ராமநாதபுரம் ஆகிய 4 பேரவைத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டுவரப்பட்டன. பின்னா், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் முன்னிலையிலும், மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையிலும், அந்த அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சங்கர நாராயணன், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.