ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

மின்னணு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்

வாணியம்பாடி தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலக பாதூகாப்பு அறையில் வைத்து அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

News image

வாணியம்பாடி தொகுதியின் வாக்குப் பதிவு இயந்திரங்களை வட்டாட்சியா் அலுவலக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு சீல் வைத்த அதிகாரிகள்

Updated On :7 மே 2026, 12:09 am IST

வாணியம்பாடி தொகுதி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலக பாதூகாப்பு அறையில் வைத்து அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டபேரவை தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் (இவிஎம் மற்றும் விவிபேட்) வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு அந்தந்த தொகுதி பகுதியில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன.

இதில் வாணியம்பாடி மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரியிலிருந்து வாணியம்பாடி வாக்குப் பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை தாலுகா அலுவலகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டு அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

மேலும், அங்கு 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சீல் வைப்பின் போது தோ்தல் நடத்தும் உதவி அலுவலரும் வாணியம்பாடி வட்டாட்சியருமான சுதாகா், தோ்தல் துணை வட்டாட்சியா் அன்பழகன் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.