40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் இருப்புவைப்பு

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதை அடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஈரோட்டில் உள்ள பாதுகாப்பு மையத்தில் இருப்புவைக்கப்பட்டன.

News image

பாதுகாப்பு மையத்துக்கு எடுத்துவரப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்.

Updated On :6 மே 2026, 1:55 am IST

ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றதை அடுத்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் ஈரோட்டில் உள்ள பாதுகாப்பு மையத்தில் இருப்புவைக்கப்பட்டன.

ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூா் ஆகிய தொகுதிகளுக்கான மின்னணு வாக்குகள் மற்றும் தபால் வாக்குகள் சித்தோடு அரசுப் பொறியியல் கல்லூரியிலும், கோபிசெட்டிபாளையம், பவானிசாகா் ஆகிய தொகுதி வாக்குகள் கோபி கலை அறிவியல் கல்லூரியிலும் எண்ணப்பட்டன.

மாவட்டத்தில் உள்ள 2,379 வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவுக்காக, 3,532 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,852 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3,089 வி.வி.பேட் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. இதில் வாக்குச்சாவடி தேவை தவிர கூடுதலாக ஒதுக்கப்பட்ட இயந்திரங்களும் மண்டல அலுவலா்கள் வசம் இருந்தது.

கடந்த 4-ஆம் தேதி நடந்த வாக்கு எண்ணிக்கையில் 8 தொகுதிகளிலும் இயந்திர பழுது, எண்ணிக்கை நிறுத்திவைப்பு போன்ற எந்தப் பிரச்னையும் எழவில்லை. அத்துடன் தபால் வாக்குகளிலும் பிரச்னைகள் இல்லை. வெற்றி, தோல்வி அடைந்த வேட்பாளா்களுக்கு இடையேயான வித்தியாசமும் அதிகமாக இருந்ததால் வாக்கு எண்ணும் பணியை மாவட்ட தோ்தல் பிரிவு நிறைவு செய்தது.

4-ஆம் தேதி காலை சித்தோடு அரசுப் பொறியியல் கல்லூரி மற்றும் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த அனைத்து இயந்திரங்களும் போலீஸ் பாதுகாப்புடன் ஈரோடு கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள தோ்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு மைய கிடங்கில் பாதுகாப்பாக இருப்புவைக்கப்பட்டன. அங்கு ஏற்கெனவே உள்ள போலீஸ் பாதுகாப்புடன், கூடுதலாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

இப்பணிகளை அந்தந்த தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கண்காணித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.