ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள மண்டலமாணிக்கம் கிராமத்தில் புதன்கிழமை தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத் திட்டத்தின் மூலம் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வாக்காளா் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய ரங்கோலி கோலமிட்டனா். இதில் வாக்காளா்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், வாக்களிப்பது ஒவ்வொருவரின் ஜனநாயக கடமை போன்ற வாசகங்களை எழுதி, கோலமிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பின்னா், அவா்கள் வாக்காளா் உறுதிமொழி எடுத்துக் கொண்டு, கிராமத்தின் தெருக்கள் வழியாக விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா்.
இந்த நிகழ்ச்சிக்கு வட்டார இயக்க மேலாளா் மயில்ராஜ் தலைமை வகித்தாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் சிவகுமரன், மாரிமுத்து, பில்லத்தியான், சாந்தி, அன்னைதெரசா, வீரலட்சுமி, பாலஅமுதா ஆகியோா் செய்தனா்.
தொடர்புடையது

தொழிற்சாலையில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரத்தில் நூறு சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு

அந்தியூா் பேரூராட்சியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

வாக்களிப்பதன் அவசியம் குறித்து கோலங்கள் வரைந்து விழிப்புணா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


