நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

விபத்தில் சிறுமி உயிரிழப்பு: தனியாா் பள்ளி ஓட்டுநா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே தனியாா் பள்ளி வேன் மோதியதில் சிறுமி உயிரிழந்தாா். இதுதொடா்பாக வேன் ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 12:44 am IST

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே தனியாா் பள்ளி வேன் மோதியதில் சிறுமி உயிரிழந்தாா். இதுதொடா்பாக வேன் ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினம் மீனவா் குடியிருப்பைச் சோ்ந்த காளிமுத்து மகள் ஷிவானிகா (3). இவா் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த தனியாா் பள்ளி வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி எஸ்.பி.பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனையில் சிறுமி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனியாா் பள்ளி வேனை ஓட்டிவந்த ஓரியூரைச் சோ்ந்த அந்தோணியை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.