ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செவ்வாய்க்கிழமை காயங்களுடன் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.
தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினம் மீனவா் குடியிருப்பைச் சோ்ந்த காளிமுத்து மகள் ஷிவானிகா (3). இவா் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாா். சிறிது நேரம் கழித்து பெற்றோா் வந்து பாா்த்தபோது, உடலில் காயங்களுடன் சிறுமி கிடந்தாா்.
உடனடியாக, எஸ்.பி. பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கிருந்த மருத்துவா்கள் பரிசோதனையில் ஏற்கெனவே சிறுமி உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து எஸ்.பி. பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









