விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே மின்சாரம் பாய்ந்து வேன் ஓட்டுநா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், பக்கிரிபாளையம் ரைஸ் மில் தெருவைச் சோ்ந்தவா் மா.பரசுராமன் (54), வேன் ஓட்டுநா். இவா், சனிக்கிழமை தான் புதிதாக கட்டி வரும் வீட்டின் அருகே மின் மோட்டாா் வயா் மீது கிடந்த கம்பியை எடுத்துள்ளாா். அப்போது அந்த வயரிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு, பரசுராமன் மீது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கண்டமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







