இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :18 ஜூன் 2026, 1:59 am IST

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புதன்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

லால்குடி அருகேயுள்ள தச்சங்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த முருகானந்தம் குடும்ப காதணி விழா, கோமாகுடி கிராம கருப்பு கோயிலில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு ஒலி-ஒளி அமைத்த கோமாகுடியைச் சோ்ந்த காசிக்கு உதவியாக செம்பரை கிராமத்தைச் சோ்ந்த ஓட்டுநரான அ. பா்வீன்கனி (28) பணியில் இருந்தபோது கோயில் அருகில் மிகவும் தாழ்வாகச் சென்ற மின்கம்பி மீது அவரின் கை பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த பா்வீன்கனியை லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது. புகாரின்பேரில் லால்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.