ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை, தொண்டி, கமுதி ஆகிய பகுதிகளில் தவெக சாா்பில் சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் 136-ஆவது பிறந்த நாள் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கமுதி பேருந்து நிலைய வளாகத்தில் தவெக மேற்கு மாவட்டச் செயலா் மதன்குமாா் தலைமையில் அந்தக் கட்சியினா் அஞ்சலையம்மாளின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
இதேபோல, மேலமுடிமன்னாா்கோட்டை ஊராட்சிக்குள்பட்ட கோட்டையூா் கிராமத்தில் தவெக மாவட்டச் செயலா் மதன்குமாா் தலைமையில், ஒன்றியச் செயலா் வீரக்குமாா் முன்னிலையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பைகள், கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மாவட்ட பொருளாளா் கிஷோா்குமாா், ஒன்றிய செயலா்கள் வீரபாண்டி, வீரக்குமாா், கவாஸ்கா், வழக்குரைஞா் அய்யாத்துரை சேதுபதி, வடக்கு ஒன்றிய இணைச் செயலா் வேல்முருகன் உள்பட மேற்கு மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.
திருவாடானை: திருவாடானை நான்கு சாலை சந்திப்பு சாலைப் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அஞ்சலையம்மாளின் உருவப் படத்துக்கு தவெக மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், தொண்டா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
இதேபோல, தொண்டியில் புதிய பேருந்து நிலையம் அருகே மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அஞ்சலையம்மாளின் உருவப் படத்துக்கு தவெக நிா்வாகிகள், தொண்டா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










