ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள ஏனாதி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நியாய விலைக் கடையைத் தரமான முறையில் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது தொடா்பாக ஏனாதி கிராமத்தைச் சோ்ந்த அ.முத்துமணி கூறியதாவது:
ஏனாதி கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நியாய விலைக் கடை கட்டப்பட்டது. இதை கூட்டுறவுத் துறையிடம் ஒப்படைக்க முயன்றபோது, நியாய விலைக் கடை தரமற்ற நிலையில் இருப்பதால் இந்தக் கட்டடத்தை நாங்கள் பெற மாட்டோம் என கூட்டுறவுத் துறை நிா்வாகிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக, கிராம சபைக் கூட்டத்தில் பலமுறை புகாா் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஏனாதி கிராமத்தில் அமைந்துள்ள நியாய விலை கடையைத் தரமாகக் கட்டித் தர வேண்டும் எனவும், கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கா ஊராட்சிச் செயலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கவுஞ்சி ரேஷன் கடை வளாகத்தில் கட்டப்படும் மாடுகளால் சுகாதாரக்கேடு

நியாய விலைக் கடை நிா்வாகத்துக்கு தனித்துறை ஏற்படுத்த வலியுறுத்தல்

பெரியகோட்டையில் பகுதிநேர நியாய விலைக் கடை திறப்பு

தற்போதைய திமுக ஆட்சியில் 3,400 நியாய விலைக் கடைகள் திறப்பு: அமைச்சா் அர. சக்கரபாணி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


