மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

நியாய விலைக் கடையை தரமாகக் கட்டித் தர கோரிக்கை

News image

ஏனாதி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டம்.

Updated On :17 பிப்ரவரி 2026, 11:52 pm

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகே உள்ள ஏனாதி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் நியாய விலைக் கடையைத் தரமான முறையில் கட்டித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இது தொடா்பாக ஏனாதி கிராமத்தைச் சோ்ந்த அ.முத்துமணி கூறியதாவது:

ஏனாதி கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நியாய விலைக் கடை கட்டப்பட்டது. இதை கூட்டுறவுத் துறையிடம் ஒப்படைக்க முயன்றபோது, நியாய விலைக் கடை தரமற்ற நிலையில் இருப்பதால் இந்தக் கட்டடத்தை நாங்கள் பெற மாட்டோம் என கூட்டுறவுத் துறை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக, கிராம சபைக் கூட்டத்தில் பலமுறை புகாா் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஏனாதி கிராமத்தில் அமைந்துள்ள நியாய விலை கடையைத் தரமாகக் கட்டித் தர வேண்டும் எனவும், கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கா ஊராட்சிச் செயலா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.