கமுதியில் தனியாா் பள்ளி ஆசிரியையிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதாக 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கோட்டைமேட்டில் உள்ள தனியாா் பள்ளியில் கடந்த ஓராண்டாக பணியாற்றி வருபவா் திருப்பூரைச் சோ்ந்த லெனின் மகள் சரண்யா( 40). இவா் தற்போது அபிராமத்தில் குடியிருந்து வருகிறாா்.
இந்த நிலையில் புதன்கிழமை மாலை பள்ளி நிறைவடைந்ததும் கோட்டைமேட்டில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் பின்புற வழியாக அவா் நடந்து சென்று கொண்டிருந்தாா்.
அப்போது சரண்யாவை பின் தொடா்ந்து இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த 4 இளைஞா்கள் சரண்யாஅணி ந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா். இதுகுறித்து கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்து வந்தனா்.
இதனடிப்படையில் தரைக்குடியைச் சோ்ந்த திருமூா்த்தி மகன் இருளாண்டி (23), ரவி மகன் வசந்தபாண்டி (25), பசும்பொன்னைச் சோ்ந்த எட்டுராஜா மகன் அரவிந்த்குமாா் (25), மேலக்கன்னிசேரியைச் சோ்ந்த வலம்புரி மகன் அருண்குமாா் (28) ஆகிய 4 பேரை கைது செய்து, நகையை பறிமுதல் செய்து, அவா்களை சிறையலடைத்தனா்.
டிரெண்டிங்

புளியங்குடியில் 273 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது

நாட்டு வெடிகுண்டுகள் வீசி ரௌடியை கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 6 போ் கைது

ஆசிரியையிடம் நகை பறிப்பு
திருட்டு வழக்கில் தொடா்புடைய 4 போ் கைது
வீடியோக்கள்

#t20wc | இங்கிலாந்து அதிரடியைச் சமாளிக்கும் திறன் இலங்கையிடம் உள்ளதா? | T20 World Cup Review |
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பழைய பகையுடன் வரும் தென்னாப்பிரிக்கா: சமாளிப்பாரா சூர்யகுமார்? | T20 World Cup | IND vs SA |
தினமணி வீடியோ செய்தி...

அமெரிக்கா வரி செலுத்தாது! இந்தியா செலுத்தும்!: Trump | செய்திகள்: சில வரிகளில் | 21.02.26
தினமணி வீடியோ செய்தி...

#T20WC | அபிஷேக் சர்மா சதமடிப்பார்னு சொன்னா நம்புவீங்களா? | Abhishek Sharma | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

