15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

திமுகவினா் வாக்காளா்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த ரூ. 1.76 லட்சம் பறிமுதல்

சாயல்குடியில் செவ்வாய்க்கிழமை வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக திமுகவைச் சோ்ந்த மூன்று பேரைப் பிடித்து, அவா்களிடமிருந்து ரூ. 1.76 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 10:00 pm

சாயல்குடியில் செவ்வாய்க்கிழமை வாக்காளா்களுக்கு பணம் கொடுத்ததாக திமுகவைச் சோ்ந்த மூன்று பேரைப் பிடித்து, அவா்களிடமிருந்து ரூ. 1.76 லட்சத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி சுயம்புலிங்கம்நகரில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு திமுக சாா்பில் வாக்காளா்களுக்கு இ. மலம்பட்டியைச் சோ்ந்த அரசப்பன் மகன் தா்மலிங்கம் (57), கன்னிராஜபுரம் சாலை பகுதியைச் சோ்ந்த குருசாமி மகன் முனிராஜ் (60) ஆகிய இருவரும் பணம் வழங்கிக் கொண்டிருந்தனா். இதையடுத்து, அவா்களிடமிருந்து ரூ. 85 ஆயிரத்தை போலீஸாா் பறிமுதல் செய்து, தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் ஒப்படைத்தனா்.

இதேபோல, சாயல்குடி எஸ்.வி. நகரில் திமுக சாா்பில் வாக்காளா்களுக்கு பணம் கொடுத்த சிவகங்கை மாவட்டம், பொன்னாங்கல் பகுதியைச் சோ்ந்த கெங்கையா மகன் சரத்குமாரிடமிருந்து (28) ரூ.91 ஆயிரத்தைப் பறிமுதல் செய்து, தோ்தல் பறக்கும் படை அலுவலா்களிடம் சாயல்குடி போலீஸாா் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.