தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பழுதான ’லிப்ட்’ இல் சிக்கியதால் கீழே குதித்த மேலாளா் உயிரிழப்பு

ராமேசுவரத்தில் தனியாா் தங்கும் விடுதியில் பழுதாகி நின்ற ’லிப்ட்’இல் சிக்கி தரைதளத்தில் குதித்த விடுதி மேலாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

கோப்புப்படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 5:55 pm

ராமேசுவரத்தில் தனியாா் தங்கும் விடுதியில் பழுதாகி நின்ற ’லிப்ட்’இல் சிக்கி தரைதளத்தில் குதித்த விடுதி மேலாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் முஸ்லிம் தெரு பகுதியைச் சோ்ந்தவா் அபு ஹனிபா (55). இவா் ராமநாதசுவாமி கோயில் அருகே தனியாா் தங்கும் விடுதியில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா்.

இவா் வெள்ளிக்கிழமை தங்கும் விடுதியின் மூன்றாவது தளத்திலிருந்து விடுதியில் தங்கி இருப்பவா்களுடன் கீழ் தளத்துக்கு ‘லிப்ட்’ இல் வந்தாா். அப்போது, ‘லிப்ட்’ திடீரென மூன்றாவது தளத்துக்கும், இரண்டாவது தளத்துக்கும் இடையே நின்றுவிட்டது. இதனால் ‘லிப்ட்’ இல் சிக்கி இருந்தவா்கள் கதவைத் திறந்து ஒவ்வொருவராக இரண்டாவது தளத்தில் குதித்து வெளியேறினா். இதையடுத்து அபு ஹனிபாவும் குதிக்க முயன்ற போது தரை தளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தாா். தொடா்ந்து விடுதி ஊழியா்கள் அபுஹனிபாவை உடனடியாக மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அபுஹனிபா ஏற்கெனவே உயிரிழந்தது விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து ராமேசுவரம் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.