சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும்

News image
Updated On :18 ஆகஸ்ட் 2025, 9:13 pm

Chennai

ராமேசுவரம்: மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும் என அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் வட்டார மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

ராமேசுவரத்தில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் வட்டார மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு அதன் தலைவா் எம். ஞானமுத்து தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராஜ்குமாா் மாநாட்டை தொடங்கிவைத்துப் பேசினாா். வட்டாரச் செயலா் எஸ். சீனிவாசன் வேலை அறிக்கையை சமா்ப்பித்தாா். வரவு-செலவு கணக்கை பொருளாளா் லட்சுமணன் சமா்ப்பித்தாா்.

ஓய்வு பெற்றோா் நலச் சங்கத்தின் மாவட்டச் செயலா் டி. ராமச்சந்திரபாபு, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் ராமேசுவரம் வட்டாரச் செயலா் வழக்குரைஞா் கலைச்செல்வன், ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினா் சுமதி, சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் ஹரிஹரசுதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மாநாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும், இலவச வீட்டுமனைப் பட்டா, சுயதொழில் செய்ய நிபந்தனையின்றி கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக, மாவட்டக் குழு உறுப்பினா் வசந்த கோகிலா வரவேற்றாா்.