நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பாம்பன் பாலத்தில் விபத்து: இளைஞா் உயிரிழப்பு

பாம்பன் பாலத்தில் காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
ஜீடேன்
Updated On :11 ஆகஸ்ட் 2025, 9:09 pm

Chennai

பாம்பன் பாலத்தில் காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சோ்ந்த மீனவச் சங்கத் தலைவா் சகாயம் என்பவரின் மகன் ஜீடேன் (22). இவா், தனியாா் பள்ளியில் வாகன ஓட்டுநராக இருந்து வருகிறாா்.

இந்த நிலையில், ஜீடேன் ஞாயிற்றுக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் மண்டபத்திலிருந்து தங்கச்சிமடத்துக்கு பாம்பன் பாலத்தில் வந்தாா்.

அப்போது, வேகமாக வந்ததில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் எதிரே வந்த காா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஜீடேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து, அங்கு வந்த பாம்பன் போலீஸாா், ஜீடேன் உடலை மீட்டு ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இந்த விபத்து குறித்த பாம்பன் போலீஸாா், திங்கள்கிழமை வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் அருணிடம் விசாரித்து வருகின்றனா்.