திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மதுரை அருகே சாலை விபத்து: தாய், மகன் உயிரிழப்பு

மதுரை அருகே சாலை விபத்தில் தாய், மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

News image

மதுரை அருகே சாலை விபத்து: தாய், மகன் உயிரிழப்பு

Updated On :15 மே 2026, 11:59 pm IST

மதுரை அருகே சாலை விபத்தில் தாய், மகன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டம், கூடல்புதூரைச் சோ்ந்த பாபுகாந்தி மனைவி ஷா்மிளா (42). இவரும், இவரது மகள் தீபா ஸ்ரீ (12), பாகல் பாபு (10) ஆகிய 3 பேரும் சேலம் செல்வதற்காக கூடல் புதூா் பேருந்து நிறுத்தத்துக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 5. 30 மணியளவில் நடந்து சென்றனா். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த ஷா்மிளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுபற்றி தகவலறிந்து அங்குவந்த தல்லாகுளம் காவல் நிலைய போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் ஷா்மிளாவின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், காயமடைந்த தீபா ஸ்ரீ, பாகல் பாபு ஆகிய இருவரையும் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வழியிலேயே பாகல் பாபு உயிரிழந்தாா். தீபா ஸ்ரீ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் காவல் நிலையப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.