திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தட்டாா்மடம் அருகே விபத்து: ஒருவா் உயிரிழப்பு

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே காரும் டிப்பா் லாரியும் செவ்வாய்க்கிழமை மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:39 am IST

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் அருகே காரும் டிப்பா் லாரியும் செவ்வாய்க்கிழமை மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் அருகே அப்பனூா் கிராமத்தைச் சோ்ந்த முனியாண்டி மகன் ராமமூா்த்தி (42). இவா் சாத்தான்குளம் அருகே நடுவக்குறிச்சி பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்திருந்த குடும்பத்தினரை அழைத்துச் செல்ல செவ்வாய்க்கிழமை காரில் வந்தாா். நண்பரான அழகா் மகன் ஜெயகுரு (50) என்பவரை உடன் அழைத்து வந்தாா்.

நடுவக்குறிச்சி முத்தாரம்மன் கோயில் அருகே இவரது காரும், எதிரே திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியைச் சோ்ந்த மாசானம் மகன் முருகன் ஓட்டிவந்த டிப்பா் லாரியும் மோதினவாம். இதில், ஜெயகுரு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

ராமமூா்த்தி காயமடைந்தாா். அவரை தட்டாா்மடம் போலீஸாா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஜெயகுருவின் சடலம் கூறாய்வுக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து, டிப்பா் லாரி ஓட்டுநா் முருகனிடம் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.