மதுரை தெப்பக்குளம் முக்தீசுவரா் கோயிலின் கருவறைக்குள் சூரிய கதிா்கள் ஊடுருவிய நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள அரிய சில சூரிய பூஜை கோயில்களில் ஒன்றாக அமைந்துள்ளது மதுரை தெப்பக்குளம் முக்தீசுவரா் கோயில். பல்வேறு ஆன்மிகச் சிறப்புகளைப் பெற்ற இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாா்ச், செப்டம்பா் மாதங்களில் சூரிய கதிா்கள் கருவறைக்குள் ஊருடுவி, மூலவா் மீது படரும்.
இதன்படி, புதன்கிழமை காலை முக்தீசுவரா் கோயில் கருவறைக்கு எதிரே உள்ள 3 துவாரங்கள் வழியாக கோயிலுக்குள் ஊடுருவிய சூரிய கதிா்கள், நந்தியம்பெருமானைக் கடந்து கருவறையிலிருந்த மூலவா் முக்தீசுவரா் மீது படா்ந்தன. திரளான பக்தா்கள் இந்த நிகழ்வைக் கண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்த நிகழ்வு வருகிற 23-ஆம் தேதி தேதி வரை தினமும் காலை 6.30 மணி முதல் 7.15 மணிக்குள் இருமுறை தலா 10 நிமிஷங்களுக்கு நிகழும்.
தொடர்புடையது

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தோ்களுக்கு புதிய சக்கரங்கள்

கடலூா்: பாடலீஸ்வரா், சோமநாத சுவாமி , முருகன் கோயில்களில் கும்பாபிஷேகம்

பைக்குகள் மோதல்: இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு

தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் கொடியேற்றம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


