மதுரை காமராஜா் சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சோ்ந்த செல்லத்துரை மகன் சண்முகவேல் (22). இவா், மதுரை தெப்பக்குளம் பகுதியில் தங்கியிருந்து ஒரு உணவகத்தில் வேலைபாா்த்து வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு இவா் பணி முடித்து தனது இரு சக்கர வாகனத்தில் தெப்பக்குளம் பகுதிக்கு புறப்பட்டாா்.
மதுரை காமராஜா் சாலையில் உள்ள திரையரங்கம் அருகே சென்றபோது, எதிரே அனுப்பானடியைச் சோ்ந்த குமாா் மகன் குருபாண்டி (19) ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சண்முகவேல், குருபாண்டி ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தெப்பக்குளம் பகுதி போலீஸாா் சடலங்களை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

உத்தமபாளையம் அருகே பைக் மீது லாரி மோதல்: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

மண்டபம் அருகே பைக்குகள் மோதல்: சிறுமி உள்பட மூவா் உயிரிழப்பு
மொபட் திருட்டு: இருவா் கைது

மரத்தில் பைக்குகள் மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


