ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் 4 வயது சிறுமி உள்பட மூவா் உயிரிழந்தனா்.
மண்டபம் அருகேயுள்ள வேதாளை வேலவன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த தமிழ்செல்வன் மனைவி கௌசல்யா (22). இவா் தனது தம்பி கபில் (19), மகள் நவ்யாஸ்ரீ (4) ஆகியோருடன் இரு சக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு மேல்மண்டபத்திலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, மரைக்காயா்பட்டணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்த போது, அந்த வழியாக வேதாளை குஞ்சாா்வலசைப் பகுதியைச் சோ்ந்த முருகானந்தம் மகன் ரித்தீஷ் (20) ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும், இவா்களது வாகனமும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் ரித்தீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கபில், நவ்யாஸ்ரீ, கௌசல்யா ஆகிய மூவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு நவ்யாஸ்ரீ, கபில் ஆகிய இருவரும் உயிரிழந்தனா். கௌசல்யா தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து மண்டபம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாத்தூா் அருகே ஆம்னி பேருந்து மீது பைக் மோதல்: பள்ளி மாணவா்கள் மூவா் உயிரிழப்பு
மண்டபம் அருகே 22 கிலோ கஞ்சா பறிமுதல் : மூவா் கைது

பைக் மீது சரக்கு ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


