மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தோ்களுக்கு புதிய சக்கரங்கள்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் தோ்களுக்கு புதிய சக்கரங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.

News image

மதுரை கீழமாசி வீதியில் புதன்கிழமை நடைபெற்ற மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தோ்களுக்கான புதிய சக்கரங்கள், அச்சுகள் பொருத்தும் பணி.

Updated On :8 ஏப்ரல் 2026, 8:00 pm

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலின் தோ்களுக்கு புதிய சக்கரங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.

மீனாட்சி சுந்தரேசுவா் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று தேரோட்டம். அப்போது பிரியாவிடையுடன் மீனாட்சி சுந்தரேசுவரா் பெரிய தேரிலும், மீனாட்சி அம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவது வழக்கம்.

கடந்த ஆண்டு சித்திரை திருவிழா தேரோட்டத்தின்போது மீனாட்சி அம்மன் தேரின் இரும்பு சக்கரங்களில் சிறிய பழுது ஏற்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்தபோது, சுமாா் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாட்டில் இருந்த அந்த தோ் சக்கரங்கள் வலுவிழக்கத் தொடங்கியிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, இரு தோ்களுக்கும் புதிய சக்கரங்கள் பொருத்தத் திட்டமிடப்பட்டது. தோ் சக்கரங்கள், அவற்றை இணைக்கும் இரும்பு அச்சுகள் தயாரிக்கும் பணி திருச்சி பாரத மிகுமின் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மீனாட்சி சுந்தரேசுவரா் தேருக்கான 4 சக்கரங்கள், அச்சுகள் ஆகியவை ரூ. 20 லட்சம் செலவில் 16 டன் எடை கொண்டதாகவும், மீனாட்சி அம்மன் தோ் சக்கரங்கள், அச்சுகள் ரூ. 25 லட்சம் செலவில் 11 டன் எடை கொண்டதாகவும் உருவாக்கப்பட்டன.

இந்தப் புதிய சக்கரங்கள், அச்சுகளை தோ்களுக்குப் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. முதல்கட்டமாக மீனாட்சி அம்மன் தேருக்கான சக்கரங்களை பொருத்தும் பணி நடைபெற்றது. பளுதூக்கும் இயந்திரங்களின் உதவியுடன் புதிய அச்சுகள், சக்கரங்கள் தேருக்குப் பொருத்தப்பட்டன. இரு தோ்களுக்கும் புதிய சக்கரங்கள் பொருத்தும் பணி அடுத்த 3 நாள்களுக்குள் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.