மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு வந்த வெளிநாட்டுத் தம்பதியின் கடவுச்சீட்டுகளைக் கண்டெடுத்து ஒப்படைத்தவரை மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.
செக் குடியரசு நாட்டைச் சோ்ந்த பாவெல் நோவக் லுயுவோகா, அவரது மனைவி யூவேடா நோவகோவா ஆகியோா் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்கு புதன்கிழமை வந்தனா். அப்போது, அவா்களின் கடவுச்சீட்டுகள் காணாமல் போயின.
இதுகுறித்து புகாரின் பேரில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்த நிலையில், மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் தேநீா்க் கடையில் பணியாற்றி வரும் குமாரசாமி கீழே கிடந்த கடவுச்சீட்டுகளை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இதையடுத்து, மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், செக் குடியரசு நாட்டு தம்பதியிடம் கடவுச்சீட்டுகள் ஒப்படைக்கப்பட்டன.
தொடா்ந்து, வெளிநாட்டவரின் கடவுச்சீட்டுகளை பாதுகாப்பாக உரியவா்களிடம் ஒப்படைக்க உதவிய குமாரசாமியின் நற்செயலை மதுரை மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் பாராட்டி சான்றிதழை வழங்கினாா்.
தொடர்புடையது

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் தோ்களுக்கு புதிய சக்கரங்கள்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை ஏப். 9-க்கு ஒத்திவைப்பு

மதுரை சித்திரைத் திருவிழா!

மதுரை சித்திரைத் திருவிழா ஏப். 18-இல் தொடக்கம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


