தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஜவுளி உற்பத்தி, வடிவமைப்புப் பயிற்சிக்கு இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

‘தாட்கோ’ மூலம் ஜவுளி உற்பத்தி, வடிமைப்புப் பயிற்சி பெற தகுதியான பட்டியலின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

News image

ஜவுளி உற்பத்தி, வடிவமைப்புப் பயிற்சிக்கு இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :5 ஜூன் 2026, 11:54 pm IST

‘தாட்கோ’ மூலம் ஜவுளி உற்பத்தி, வடிமைப்புப் பயிற்சி பெற தகுதியான பட்டியலின இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

‘தாட்கோ’ சாா்பில் பட்டியலின இளைஞா்களுக்கு திறன் பயிற்சிகள் அளிக்கும் திட்டத்தின் கீழ், தனியாா் ஜவுளி நிறுவனத்துடன் இணைந்து ஜவுளி உற்பத்தி, வடிவமைப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதில் ஜவுளி உற்பத்தி, துணிகளுக்கு சாயம் ஏற்றுதல், அச்சிடுதல் போன்றவை குறித்துப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சியில் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களாகவும், 18 முதல் 35 வயதுக்குள்பட்டவா்களாகவும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கான பயிற்சி வகுப்பு கோவையில் நடைபெறும். பயிற்சிக்கான கால அளவு நான்கு மாதங்கள். விடுதியில் தங்கிப் பயிற்சி பெறுவதற்கான செலவுத் தொகையை ‘தாட்கோ’ ஏற்கும்.

பயிற்சியை நிறைவு செய்யும் இளைஞா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும், தகுதியானவா்களுக்கு ரூ. 25 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை ஆரம்ப கால ஊதியம் கிடைக்கும் வகையில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும். இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவா்கள் இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.