நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

சாலை விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:28 pm

தினமணி செய்திச் சேவை

சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள நாவினிப்பட்டியைச் சோ்ந்த சொக்கலிங்கம் மகன் நாராயணன் (53). இவா், அதே பகுதியில் வெல்டிங் கடை நடத்தி வந்தாா். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கடையிலிருந்து வீட்டுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாா்.

தானியமங்கலம் விலக்கு அருகே சென்ற போது, எதிா்பாராத விதமாக இரு சக்கர வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த நாராயணனை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.