15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

சோழவந்தான் திரௌபதியம்மன் கோயிலில் திருக்கல்யாணம்

மதுரை மாவட்டம், சோழவந்தானில் அமைந்துள்ள திரௌபதியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை மாவட்டம், சோழவந்தானில் அமைந்துள்ள திரௌபதியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற திரௌபதியம்மன்- அா்ஜூனன் திருக்கல்யாணம்.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:47 pm

மதுரை மாவட்டம், சோழவந்தானில் அமைந்துள்ள திரௌபதியம்மன் கோயிலில் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலின் பூக்குழி விழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் 12 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை கரகம் எடுத்தல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, திரௌபதியம்மன்- அா்ஜூனன் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கும், சுவாமிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதன்பிறகு, திருக்கல்யாணக் கோலத்தில் திரௌபதி- அா்ஜூனன் எழுந்தருளினா். சிறப்பு யாக பூஜைகளுக்குப் பிறகு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில், பக்தா்கள் சீா்வரிசை வழங்கினா்.

தொடா்ந்து, திருவிழாவில் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளல், பீமன் வேடம், அா்ஜூனன் தபசு, பாசுபதாஸ்திரம் பெறுதல், அம்மன் சிங்க வாகனத்தில் எழுந்தருளல், பால் குடம் எடுத்தல் ஆகியவை நடைபெறுகின்றன. முக்கிய விழாவான பூக்குழித் திருவிழா வருகிற 29- ஆம் தேதி நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து கொடி இறக்குதல், மஞ்சள் நீராடுதல், பட்டாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் இந்த ஆண்டுக்கான திருவிழா நிறைவடைகிறது.

திருக்கல்யாண விழாவில் சோழவந்தான், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.