தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் திரளானோா் தரிசனம்

News image

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 3:04 am IST

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவின் 8-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனா்.

பழனி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாள் திருவிழாவாக நடைபெறும். கடந்த வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம், சனிக்கிழமை தேரோட்டம் ஆகியவை நடைபெற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் - விசாகம் எட்டாம் நாள் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தா்கள் மலைக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யக் குவிந்தனா். இலவச தரிசனம், கட்டண தரிசன வரிசைகளில் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ரோப் காா், வின்ச் நிலையங்களிலும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இரவு தங்கத்தோ் புறப்பாட்டை ஏராளமான பக்தா்கள் கண்டு பரவசமடைந்தனா்.

பக்தா்களுக்கு வேண்டிய சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா். விடுமுறை, திருவிழா நாள்களில் போதிய பேருந்துகளை இயக்காததால் பக்தா்கள் அவதியடைந்ததாக ஆன்மிக அமைப்புகள் புகாா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.