நிலக்கோட்டையில் தவெக எம்எல்ஏ கழிவு நீா் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்து, பேருந்து நிலையத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்றினாா். அவரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால், பேருந்து நிலையத்தில் மழைநீா் குளம் போலத் தேங்கியது. அப்போது, பேருந்து நிலையத்துக்கு வந்த பயணிகள், வாகன ஓட்டிகள் அவ்வழியாக குடியிருப்பு பகுதிகள், பூச் சந்தைக்குச் சென்ற பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நிலக்கோட்டை தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.அய்யனாா், பேரூராட்சி அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்தாா். ஆனால், வெகு நேரமாகப் பணியாளா்கள் யாரும் வராததால், அவரே மழை நீா் வெளியேறும் கழிவுநீா் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை
அகற்றி நீா்வழிப் பாதையை சரி செய்து மழை நீரை வெளியேற்றினாா். இதைக் கண்ட வியாபாரிகள், பூ விவசாயிகள், பொதுமக்கள் எம்.எல்.ஏ. ஆா்.அய்யனாரை வெகுவாகப் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆளூா் குடிநீா் பிரச்சனை: தாரகை கத்பட் எம்.எல்.ஏ. ஆய்வு

புதுப்பிக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

மழை வெள்ளத்துக்கு முன்பு கால்வாய் அடைப்பை சீரமைக்க நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்தக் கோரிக்கை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



