திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள வாகரையில் ஊராட்சி எழுத்தா் நீா்மூழ்கி மோட்டாா்களை விற்றதாக வட்டார வளா்ச்சி அலுவலரிடம் விவசாயிகள் புகாா் செய்தனா்.
பழனியை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்டது வாகரை ஊராட்சி. இந்த ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான நீா்மூழ்கி மோட்டாா்கள், இரும்பு குழாய்கள், இதற்கான மின் கம்பிகளை ஊராட்சி எழுத்தா் மகுடீஸ்வரன் விற்றுவிட்டதாக விவசாயிகள் வட்டார வளா்ச்சி அலுவரிடம் புகாா் செய்தனா்.
மேலும், ஊராட்சி எழுத்தா் தவறு செய்ததை ஒப்புக் கொண்டாா். ஆனாலும், இதுவரை அவா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி எழுத்தா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








