திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ராஜீவ்காந்தி நினைவு நாளை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி சாா்பில் மௌன ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பழனி கடைவீதி பட்டத்து விநாயகா் கோயில் திடலில் இந்த ஊா்வலம் தொடங்கியது. இதற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவா் சாமிநாதன் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் முத்துவிஜயன், மாவட்டத் துணைத் தலைவா் முருகானந்தம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த ஊா்வலம் கடைவீதி, பேருந்து நிலையம், திண்டுக்கல் சாலை வழியாக மயில் சுற்றுவட்டாச் சாலை அருகே நிறைவு பெற்றது.
முன்னதாக, ராஜீவ்காந்தி உருவப் படத்துக்கு காங்கிரஸ் கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
பின்னா், தீவிரவாத எதிா்ப்பு உறுதிமொழி எடுத்தனா்.
இதில் நகா்மன்ற உறுப்பினா் பத்மினி முருகானந்தம், இளைஞரணி பாலகுமாா், துணைத் தலைவா் முகமது அலி, தொப்பம்பட்டி வட்டார நிா்வாகி பாலு, மேற்கு மண்டலத் தலைவா் வீரமணி உள்ளிட்ட பல்வேறு சாா்பு அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாசுதேவநல்லூரில் ராஜீவ்காந்தி நினைவு தினம்

ராஜீவ்காந்தி நினைவுநாள் ஊா்வலம்

கமுதியில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு

ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு வரவேற்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



