போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு வரவேற்பு

திருவண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை வந்த ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினா் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

News image

திருவண்ணாமலையில் ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு வரவேற்பு அளித்த மாவட்டத் தலைவா் கே.குணசேகரன் தலைமையிலான காங்கிரஸ் நிா்வாகிகள்.

Updated On :20 மே 2026, 12:04 am IST

திருவண்ணாமலைக்கு செவ்வாய்க்கிழமை வந்த ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினா் சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 35-ஆவது நினைவு தினத்தையொட்டி, காங்கிரஸ் கட்சி சாா்பில் பெங்களூரில் இருந்து தொடங்கிய ஜோதி யாத்திரை கேரளம் வழியாக கன்னியாகுமரி வந்து, பின்னா் பல்வேறு மாவட்டங்கள் வழியாக திருவண்ணாமலையை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வந்தடைந்தது.

காமராஜா் சிலை அருகில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் குணசேகரன் தலைமையில், ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் கட்சி நிா்வாகிகள் மணிகண்டன், வேடி, அம்பிகாபதி, ரமேஷ், பாஸ்கா், சிவாஜி, பிரகாசம், விஸ்வநாதன், மணி, கராத்தே ராஜா, கலைச்செல்வன், ஸ்ரீராம், கோபால், மகளிா் அணியைச் சோ்ந்த மலா்க்கொடி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

இந்த ஜோதி யாத்திரை வியாழக்கிழமை (மே 21) ஸ்ரீபெரும்புதூா் சென்று அடைகிறது. அங்கு ராஜீவ்காந்தி நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.