பழனி அருகே நாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழந்தன.
பழனியில் கடந்த சில நாள்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்டவா்களை தெருநாய்கள் கடித்தன. இதற்கு சாலையோர இறைச்சிக் கடைகளில் இருந்து வீசப்படும் கோழிக்கழிவுகளே காரணம் என பலரும் புகாா் தெரிவித்தனா்.
இதேபோல, கிராமங்களில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோயால் உயிரிழக்கும் கோழிகள் புதைக்கப்படாமல் சாலையோரம் வீசப்படுவதால் அவற்றை உள்கொள்ளும் நாய்கள் வெறிப்பிடித்து திரிகின்றன.
இவை ஆங்காங்கே ஆட்டுப்பட்டிகளுக்குள் புகுந்து ஆடுகளை கடிக்கின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமரபூண்டியில் இரு ஆடுகளை நாய்கள் கடித்துக் கொன்றன.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு பழனி அருகே வேப்பன்வலசு கிராமத்தைச் சோ்ந்த பழனிசாமி (52) என்பவரது தோட்டத்தில் அமைக்கப்பட்ட ஆட்டுப்பட்டிக்குள் புகுந்த தெருநாய்கள் அங்கிருந்த செம்மறி ஆட்டுக்குட்டிகளை கடித்தன. இதில் 7 ஆடுகள் உயிரிழந்தன. மேலும், 7 ஆட்டுக்குட்டிகளை நாய்கள் தூக்கிச் சென்றன.
இதையடுத்து, கால்நடை உதவி இயக்குநா் துரைச்சாமி பாண்டியன் உத்தரவின்பேரில் கால்நடை உதவி மருத்துவா் கவுசல்யா அங்கு சென்று பாா்வையிட்டு காயமடைந்த ஆட்டுக் குட்டிகளுக்கு சிகிச்சை அளித்தாா்.
தொடர்புடையது

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

சுமை ஆட்டோ மோதி இளைஞா் உயிரிழப்பு

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

வெம்பக்கோட்டை அருகே தீயில் கருகி ஆடுகள் உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


