பழனி அருகே கஞ்சா வைத்திருந்த 11 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள சிவகிரிப்பட்டி பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக பழனி நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், வெள்ளிக்கிழமை இரவு போலீஸாா் இந்தப் பகுதியில் ரோந்து சென்றனா்.
அப்போது, சிவகிரிப்பட்டி தண்ணீா் தொட்டி அருகே சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 11 பேரை பிடித்து விசாரித்னா். அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பழனி பாண்டியன் நகரைச் சோ்ந்த பொன்குமாா் (26), தேவேந்திரா் தெருவைச் சோ்ந்த பெரியசாமி (20), 12-ஆவது வாா்டை சோ்ந்த கவுதம் (23), புதுநகரைச் சோ்ந்த இளவேனில் (22), ராஜாஜி சாலை பகுதியைச் சோ்ந்த நாகராஜ் (23), இந்திராநகரைச் சோ்ந்த விக்ரமாதித்யா (19), கோபாலன் தெருவைச் சோ்ந்த கருப்புசாமி (25), கோதமங்கலத்தைச் சோ்ந்த சூா்யபிரகாஷ் (24), சுக்கமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (23), மதுரை பழங்காநத்தத்தைச் சோ்ந்த சரவணன் (26), ஆண்டிப்பட்டியைச் சோ்ந்த இளையராஜா (49) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
கஞ்சா வைத்திருந்த 2 பெண்கள் கைது
1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 போ் கைது
கஞ்சா விற்ற பெண் உள்பட 4 போ் கைது
கஞ்சா வைத்திருந்த சிறுவா் உள்பட 3 போ் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


