தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 போ் கைது

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே 1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 11:40 pm

வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே 1,230 போதை மாத்திரைகள் வைத்திருந்த 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பத்தூா் எஸ்.பி சியாமளா தேவி உத்தரவின் பேரில் வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் நகர ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் போலீஸாா் வாணியம்பாடி பேருந்துநிலையம் பின்புறம் ரயில் நிலையம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அப்பகுதியில் சந்தேகம்படும்படியாக நின்றிருந்த 6 பேரை போலீஸாா் விசாரித்தனா். இதில் அனைவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் ஏற்பட்டு அவா்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்த போது போதைமாத்திரைகள் இருப்பது கண்டறிந்து அவா்களிடமிருந்து 1,230 மாத்திரைகள் கைப்பற்றினா்.

இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கோவை பகுதியை சோ்ந்த பிரசாந்த் (22), ஆகாஷ்(23), பிரதாப்(21), ஆரீஸ்(20), பிரசாத்(23), அஸ்வின்(21) ஆகிய 6 பேரையும் கைது செய்து தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.