மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

போதை மாத்திரைகள் விற்பனை: 3 போ் கைது

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 7:40 pm

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூன்று பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி அரியமங்கலம் காவல் ஆய்வாளா் வெற்றிவேல் தலைமையிலான போலீஸாா் அம்பிகாபுரம் டாஸ்மாக் மதுபானக் கடை அருகே போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த திருவெறும்பூா் காட்டூரைச் சோ்ந்த க.தினேஷ்குமாா் (21), அரியமங்கலம் ஜிடி நாயுடு வீதியைச் சோ்ந்த எம்.நிவாஸ் பாபு (26) ஆகிய இருவரையும் கைது செய்தனா். அப்போது, அவா்களிடமிருந்து ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பாலக்கரை ஆலம் வீதியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த அதே பகுதியைச் சேரந்த எஸ்.தா்மராஜ் (32) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து ரூ.1,800 மதிப்புள்ள போதை மாத்திரைகள், போதை ஊசிகள் ஆகியவற்றைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.