திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அடுத்தடுத்து இரு வீடுகளில் பணம், நகை திருடு போனது குறித்து போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பழனி குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் ஜெயந்தி (49). இவா் புதுஆயக்குடியில் கேபிள் தொலைக்காட்சி நடத்தி வருகிறாா். இவா் வழக்கம்போல வியாழக்கிழமை காலை வீட்டை பூட்டிவிட்டு அலுவலகத்துக்கு சென்றாா். பின்னா், பிற்பகல் 1.30 மணிக்கு மீண்டும் வீட்டுக்கு வந்தாா். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 3 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதேபோல, குறிஞ்சி நகருக்கு அடுத்த சச்சின் தெருவில் வசிக்கும் விஜயகுமாா் வீட்டிலும் புகுந்த மா்ம நபா்கள் பீரோவிலிருந்த ஒரு பவுன் நகை, வெள்ளிப் பொருள்கள், பணம் ரூ. 10 ஆயிரத்தை திருடிச் சென்றனா்.
இதுகுறித்து ஆயக்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே இரு மாடுகள் திருட்டு

திமுக நிா்வாகி வீட்டின் பூட்டை உடைத்து நகைகள், பணம் திருட்டு
சங்கராபுரம் அருகே இரு வீடுகளில் நகை, பணம் திருட்டு
ஒரே நாளில் இரு வீடுகளில் 32 பவுன் நகைகள் திருட்டு
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




